தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஐதராபாத் : ஐதராபாத்தில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த போதை விருந்தில் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரான நடிகர் நாகபாபுவின் மகள் நிஹாரிகா உட்பட 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரை பிரபலங்கள், அதிகாரிகளின் வாரிசுகள் என பலரிடமும் இப்போது போதை பொருட்களின் புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனும் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் பப்பில் நேற்று (ஏப்ரல் 3) அதிகாலையில் நடந்த பார்ட்டியில் கொகைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
![]() |