பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அஞ்சாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜ்மல், அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் கோ படத்தின் மூலம் வில்லன் ஆனார். மீண்டும் சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் அதன்பிறகும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மத்திய சென்னை, காட்டு பயசார் இந்த காளி, படங்களை தயாரித்து அதில் தானே ஹீரோவாக நடித்தவர் ஜெய்வந்த். ஹீரோவாக ஜெயிக்க போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர்.
சிவாஜியின் பேரன் துஷ்யந்த் (ராம்குமாரின் மகன்). சக்சஸ் என்ற படத்தில் அறிமுகமாக அதன்பிறகு மச்சி என்ற படத்தில் நடித்தார். இரண்டு படமுமே கை கொடுக்காத நிலையில் நடிப்பில் இருந்து விலகினார்.
இந்த மூவரும் தற்போது தீர்க்கதரிசி என்ற படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். ஸ்ரீ சரவணா பிலிம்ஸ் சதிஷ் குமார் தயாரிக்கிறார், பி.ஜி.மோகன் , எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்குகின்றனர். ஜி.பாலசுப்பிரமணியம் இசை அமைக்கிறார், ஜெ.லட்சுமண குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது. ரீ எண்ட்ரி ஆகும் மூன்று ஹீரோக்களுக்கும் தீர்க்கதரிசி திருப்பம் தருவாரா என்பது படம் வெளியானதும் தெரியும்.