'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வேகமாக வளர்ந்தார், வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார், அதன்பிறகும் கூட மிருதன், றெக்க படங்களில் நடித்தார்.
இடையில் அவருக்கு என்ன ஆச்சு? என்று தெரியவில்லை. எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்றார். சில ஆண்டுகள் படம் இன்றி இருந்தவர் தற்போது ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் மலை என்ற படத்தில் அவர் யோகிபாபு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த முருகேஷ் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படம் மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது, மலை படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே இருக்கும். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வரும் ஒரு மருத்துவராக நடிக்கிறார், அந்த கிராமத்தில் அவருக்கு நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது.
யோகி பாபு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், லட்சுமி மேனன், யோகிபாபு இருவருக்கும் இடையே நடக்கும் நிகழ்வு இப்படத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. மேலும் காளி வெங்கட் கதாபாத்திரம் அனைவராலும் பெரிதும் பேசப்படும், சிங்கம்புலி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரிடன் மேலும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகை லட்சுமி மேனன், நடிகர் யோகி பாபு ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் இருவரின் கதாபாத்திரம் திரையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. என்றார்.