இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பொதுவாக திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகர் நடிகைகள் தாங்கள் வாகனங்களில் பயணிப்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும் ரசிகர்களின் அன்புத்தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காகவும் தங்களது கார் கண்ணாடிகளில் கருப்பு பிலிம்களை ஒட்டி வலம் வருகின்றனர். இந்தியாவில் 2012லிருந்து இப்படி கருப்பு நிற பிலிம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆந்திராவில் தற்போது போக்குவரத்து போலீஸார் இதை கடுமையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் மார்க்கெட் பகுதியில் அப்படி கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் பயணித்தது தெரிய வந்துள்ளது. பிரபல நடிகராக இருந்தாலும் விதிமீறல் என்பதால் ரூ.700 அபராதம் விதித்து, அதனை வசூலித்த பின்னரே அவரை அனுப்பி வைத்தனராம். அல்லு அர்ஜுனும் எந்தவித் வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபாரத தொகையை செலுத்திவிட்டு அமைதியாக சென்றுவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.