ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனாக நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 வெளியாக இருக்கிறது. அதேசமயம் அவர் ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் என்கிற படமும் இதே மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார். இவர் சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த கடமையை செய் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் கிடைத்த வெற்றியும் அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பும் தான் எஸ்.ஜே.சூர்யா படத்தை சிம்புவின் நிறுவனம் வெளியிடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.