தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராஜமவுலி.
இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத், வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விட கூடாது என கூறினார். அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்காக இரண்டு விதமான கதைகளை பிடித்தோம்.. இரண்டுமே மிக பிரமாண்டமான பட்ஜெட்டை கேட்கும் கதைகள் தான். அதேசமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள்” என்று கூறியுள்ளார்.