கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பேசும்போது "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் தீங்கு பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் இடம்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடிகர்களை கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.