50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த படத்தில் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் 1 வருடத்தை நிறைவு பெற்றுள்ளது. அன்றைய தினமே நானே வருவேன் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ், இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். அதோடு தனுஷிற்கு கர்ணன் பட உருவச் சிலையையும் பரிசாக அளித்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் ஓராண்டை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறப்பு விருந்தை ஏற்பாடுசெய்து கர்ணன் படக்குழுவினர் அனைவருக்கும் கேடயம் மற்றும் கர்ணன் பட உருவச்சிலையை தயாரிப்பாளர் தாணு வழங்கி உள்ளார்.