தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கூட ஒரு தமிழ்ப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகாது. ஆனால், கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் தமிழ்ப் படங்கள் எப்போதுமே அதிக தியேட்டர்களில் வெளியாகும். காலம் காலமாக நடந்து வரும் ஒரு விஷயம் இது.
நாளை விஜய் நடித்துள்ள தமிழ்ப் படமான 'பீஸ்ட்', நாளை மறுநாள் யஷ் நடித்துள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஆகிய இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
பெங்களூருவைப் பொறுத்தவரையில் கன்னடப் படமான 'கேஜிஎப் 2' ஏப்ரல் 14ம் தேதியன்று அங்குள்ள தியேட்டர்களில் மொத்தமாக 450க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. அதே சமயம் தமிழ்ப் படமான 'பீஸ்ட்' நாளை ஏப்ரல் 13ம் தேதியன்று 750க்கும் மேற்பட்ட காட்சிகளாக நடைபெற உள்ளது. இருப்பினும் இரண்டாம் நாளில் 'பீஸ்ட்' படத்திற்கான காட்சிகள் குறைந்துவிடும். இருந்தாலும் வெளியாகும் முதல் நாளில் அதிகமான காட்சிகளில் திரையிடல் என்பது ஒரு சாதனைதான். இது இன்றைய நிலவரம். இன்னும் சில மணி நேரங்களில் கூடுதல் காட்சிகள் சேரவும் வாய்ப்புள்ளது.