திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் வசூல் செய்யாத அளவிற்கு முதல் நாள் வசூலில் 'கேஜிஎப் 2' சாதனை படைத்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்திய அளவில் பல இடங்களில் இப்படம் புதிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. ஹிந்தியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 60 கோடி வரை வசூலித்திருக்கும் என்கிறார்கள். மற்ற தென்னிந்திய மாநிலங்கள், உலகின் பிற பகுதிகள் என அனைத்தும் சேர்த்து சுமார் 150 கோடி வரை வசூலித்திருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் அதற்குள்ளாக இப்படம் 500 கோடி வசூலைப் பெற்றுவிடும் வாய்ப்பும் உள்ளது என்று சொல்கிறார்கள். ஒரு கன்னடப் படம் இந்தியத் திரையுலகில் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைப்பது மிகப் பெரும் விஷயம்.
ராஜமவுலியை மிஞ்சும் அளவிற்கு இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸை மிஞ்சும் அளவிற்கு யஷ் உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.