சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். சில வருடங்களுக்கு முன் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படத்திலேயே மிரட்டலான வில்லத்தனத்தால் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தநிலையில் தமிழில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் ஒன் 2 ஒன் என்கிற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார் அனுராக் காஷ்யப். கதாநாயகியாக ராகினி திவேதி நடிக்கும் இந்த படத்தை திருஞானம் இயக்குகிறார். இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையாக பவர்புல் வில்லன் வேடம் இருந்ததால் பலபேரை பரிசீலனையில் வைத்திருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கூட யோசனை செய்யப்பட்டதாம். இறுதியில் அனுராக் காஷ்யப் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த தகவலை அனுராக், சுந்தர்.சி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.