மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் 'கேஜிஎப் 2'. இப்படத்தின் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் என பெயரைப் பெற்றிருக்கிறார் பிரசாந்த் நீல்.
'கேஜிஎப் 2' படம் குறித்த பல பேட்டிகளை அவர் கொடுத்துள்ளார். அதில் ஒரு பேட்டியில் அவர் பேசியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்படி கதை எழுதுகிறீர்கள் என்ற ஒரு கேள்விக்கு, “குடித்த பின்தான் கதைகளை எழுதுவேன். மறுநாள் நான் நிதானமாக இருக்கும் போது முன்தினம் போதையில் எழுதிய கதையைப் படித்துப் பார்த்தேன். அப்போது அவை எனக்கு சிறந்ததாகத் தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதையை எழுதுவேன்,” என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பொதுவாகவே திரையுலகத்தில் உள்ளவர்கள் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்ற பேச்சு உண்டு. இந்தக் காலத்தில் அனைவருமே அவர்களது பழக்க வழக்கங்களை வெளிப்படையாகப் பேசிவிடுகிறார்கள். பிரசாந்த் நீல் இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது. இதனால், வளரத் துடிக்கும் பலரும் குடித்தால் நன்றாக கதை எழுதலாம் என அந்த முயற்சியில் இறங்கும் ஆபத்தும் இருக்கிறது.