ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தென்னிந்திய சினிமாக்களில் இனிவரும் நாட்களில் பான் இந்திய திரைப்படம் என்கிற வார்த்தை தவிர்க்க முடியாத ஒன்றாக புழக்கத்திற்கு வந்து விட்டது. குறிப்பாக பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்த வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான புஷ்பா, சமீபத்தில் வெளியான ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் மற்றும் கன்னடத்திலிருந்து வெளியாகியுள்ள கேஜிஎப் ஆகிய படங்கள் பான் இந்தியா ரிலீஸாக வெளியாவதால் ஏற்படும் லாபங்களை வெளிச்சம் போட்டு காட்டி விட்டன.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலமாக தெலுங்கு தவிர்த்து மற்ற மொழி ரசிகர்களுக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நன்கு அறிமுகமாகி விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நடிக்க உள்ள அவரது முப்பதாவது படம் பான் இந்தியா படமாக உருவாகிறது என்பதை அந்த படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா தற்போது தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக பான் இந்தியா படத்திற்கான கதை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஜனதா கேரேஜ் என்கிற வெற்றிப்படத்தை ஜூனியர் என்டிஆர் கொடுத்தவர்தான் இந்த கொரட்டாலா சிவா என்பது குறிப்பிடத்தக்கது.