ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மிகுந்த எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான பீஸ்ட் போதிய வரவேற்பை பெறாததால் விஜய் ரொம்பவே அப்சட் ஆகியிருக்கிறார். இதனால் அடுத்து உடனடியாக ஒரு வெற்றியை கொடுத்து தனக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்ப வேகமெடுத்திருக்கிறார்.
விஜய் தற்போது தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இந்த படத்தை இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மூவிஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இதுவரை 30 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது விஜய், ராஷ்மிகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் தொடங்குகிறது என்கிறார்கள். இந்த படம் குடும்ப உறவுகளை பற்றிய சென்டிமெண்ட் படம் என்பதால் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இல்லை. எனவே படத்தை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். வருகிற தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வந்து ஒரு வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதால் படத்தின் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருவதாக தெரிகிறது.