தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' இரண்டு பாகங்களிலும் நடித்து பெரிய வரவேற்பையும் பெற்றார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் கூட வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'நிசப்தம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அவரது எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
நடிக்க வந்த வாய்ப்புகள் பலவற்றையும் அவர் வேண்டாமென சொன்னதாகத் தகவல். தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். 40ஐத் தொட்டுவிட்டதால் இன்றைய இளம் நடிகர்களுடன் அனுஷ்காவால் ஜோடி சேர முடியாததும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அவ்வப்போது சமூக வலைத்தளம் பக்கம் எட்டிப் பார்க்கும் அனுஷ்கா, நேற்று அவருடைய அப்பாவின் பிறந்தநாளுக்காக அப்பாவுடன் விதவிதமாக எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வருடங்கள் கடந்து போனாலும், நீங்கள் எவ்வளவு வயதை அடைவீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. நான் எப்போதும் உங்கள் குட்டிப் பொண்ணு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.