தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' இரண்டு பாகங்களிலும் நடித்து பெரிய வரவேற்பையும் பெற்றார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் கூட வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'நிசப்தம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அவரது எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
நடிக்க வந்த வாய்ப்புகள் பலவற்றையும் அவர் வேண்டாமென சொன்னதாகத் தகவல். தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். 40ஐத் தொட்டுவிட்டதால் இன்றைய இளம் நடிகர்களுடன் அனுஷ்காவால் ஜோடி சேர முடியாததும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அவ்வப்போது சமூக வலைத்தளம் பக்கம் எட்டிப் பார்க்கும் அனுஷ்கா, நேற்று அவருடைய அப்பாவின் பிறந்தநாளுக்காக அப்பாவுடன் விதவிதமாக எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வருடங்கள் கடந்து போனாலும், நீங்கள் எவ்வளவு வயதை அடைவீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. நான் எப்போதும் உங்கள் குட்டிப் பொண்ணு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.