இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கன்னடத்தில் இயக்கிய படம் ரணதந்திரா. தற்போது அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் 6 வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் இயக்கிய ரணதந்திராவை மாஸ்க் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்.
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, மேக்னா நாயுடு, ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே நாராயன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம் கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி ஆதிராஜன் கூறியதாவது: சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர், மதுரை போன்ற இடங்களில் ஒரே மாதிரியாக மர்மமான முறையில் இளம் பெண்கள் கொல்லப்படுகிறார்கள். அது கொலையா?!தற்கொலையா?! இல்லை அமானுஷ்ய சக்தியின் ஆட்டமா? என்று முடிவு செய்ய முடியாமல் காவல்துறை தடுமாறுகிறது. தீவிரமாக விசாரிக்கும்போது அதன் பின்னணியில் இருக்கும் காரணம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
பெண்களுக்கு தரப்படும் அதீத சுதந்திரம் அவர்களை எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டி விடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து விறுவிறுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத கோணத்தில் இருக்கும். த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக இருக்கும். என்றார்.