தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நானும் ரவுடிதான் படபிடிப்பு நடந்து வந்தபோது காதல் வயப்பட்ட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், தங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதன் பிறகு வருகிற ஜூன் மாதம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊரில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது திருமணத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.