ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

நானும் ரவுடிதான் படபிடிப்பு நடந்து வந்தபோது காதல் வயப்பட்ட நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில், தங்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தினார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதன் பிறகு வருகிற ஜூன் மாதம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த ஊரில் நடப்பதாகவும் கூறப்படுகிறது. தங்களது திருமணத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் 62ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.