துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார். தற்போது இவர்களின் மகள்கள் இருவரும் நடித்து வருகிறார்கள். ஜீவிதாவும், ராஜசேகரும் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜீவிதாவும், ராஜசேகரும் கருட வேகா என்ற படத்தை தயாரிக்க ஆந்திராவை சேர்ந்த ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 26 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். கடனை திருப்பி செலுத்த அவர்கள் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வர ராஜூ, நிர்வாக இயக்குனர் ஹேமா ஆகியோர் ஜீவிதா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் ஜீவிதாவுக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இது குறித்து ஜீவிதா கூறியிருப்பதாவது: என் மீது தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்கே மோசடியானது. என் மீது எந்த தவறும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதனை சட்டப்படி சந்திப்பேன். என்று கூறியிருக்கிறார்.