தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் பல திறமைகளை கொண்டவரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, ‛ஆம்பள' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர். அதன்பிறகு இயக்குனர், ஹீரோ என்றும் பயணித்து வருகிறார். இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதையடுத்து ஆதி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து சிசிடிவி கேமரா மூலம் அந்த மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர்கள் என்றும், குடி போதையில் இருந்த போது இந்த கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.