தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
தற்போது சமந்தா தெலுங்கில் சிவ நிர்வாண இயக்கத்தில் விஜய தேவர கொண்டாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் இப்படத்தை வெற்றி பெற வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. அதோடு தெலுங்கு படப்பிடிப்புக்காக நான் காஷ்மீரில் இருப்பதால் தன்னால் காத்துவாக்குல ரெண்டு காதல் பட குழுவினருடன் இணைந்து திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் போனது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.