பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தனது 41ஆவது படத்திலும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதை அவரது 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிக்கிறது. ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மீனவர்கள் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அங்கு படப்பிடிப்பில் இருந்தபோது இயக்குநர் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் இதனால் கோபமடைந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விட்டதால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இந்த செய்தியை சூர்யா தரப்பு மறுத்துள்ளது.
இதுபற்றி 2டி நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‛‛கன்னியாகுமரியில் 34 நாளில் சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் கோவாவில் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.