துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி |
இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன், தற்போது நடிகராகவும், அவரது திரைப் பயணத்தை விரிவுபடுத்தி உள்ளார். 'பீஸ்ட்' படத்தை அடுத்து, அவர் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' படம் ஓ.டி.டி.,யில் வெளியாகி உள்ளது. அவர் நம் நாளிதழுக்கு அவர் அளித்த மினிபேட்டி: 'சாணிக்காயிதம்' கதை ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. ஏன், நாம நடிக்கக்கூடாதுனு நினைச்சேன். 'சாணிக்காயிதம்' டீமை, வெறிப்பிடிச்ச 'டீம்!' வேலையை தவிர எதுவும் யோசிக்காம, ஓடிட்டே இருந்தாங்க; எனக்கு நல்ல அனுபவமா இருந்துச்சு.
நடிக்க போகும்போது, இயக்குனர் செல்வராகவனை மூட்டை கட்டி வைச்சுட்டு, நடிகரா மட்டுமே போனேன். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்; இன்னும் நிறைய கத்துக்கணும். 'செட்'டுல, கீர்த்தியின் நடிப்பை நிறைய முறை வேடிக்கை பார்த்தேன். திறமையான நடிகை. கதை அமைஞ்சால், தனுஷுடன் இணைந்து நடிப்பேன். மீண்டும், '7 ஜி ரெயின்போ காலனி' மாதிரியான படங்களை இயக்கலாம்.
'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு, இறுதி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு. எதிர்கால திட்டம் எல்லாருக்கும் இருக்கும். சினிமாவில் பக்குவம் வரும்போது, இன்றைய நாளை தவிர பெரிய சிந்தனை எல்லாம் இருக்காது. இப்ப செய்ற வேலையை சரியாக செஞ்சா போதும்னு நினைக்கிறேன். என் படத்திலேயே 'ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை' இரண்டாம் பாகங்களை எடுக்கலாம். அதுக்கான களம், நேரம் அமையணும் என்றார்.