மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்குகிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு வேடத்திற்கு கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படம் இது. அதேபோல ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதும் இதுவே முதல் முறை. கீர்த்தி சுரேஷ் போலோ சங்கர் படத்தில் ராம்சரணின் தந்தை சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை தில்ராஜ் தயாரிக்கிறார், தமன் இசை அமைக்கிறார். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். படக் கதையில் பிளாஷ்பேக்கில் வரும் சிறிய பீரியட் காட்சிகளில் ராம்சரணுடன் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.