வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

கவுதம் மேனன், சிம்பு, திரிஷா கூட்டணியில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? எப்போது உருவாகும்? என்று சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவுதம் மேனனிடத்தில் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அதோடு கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.