தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி, ஓ சொல்றியா மாமா என இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார்.
இந்த நிலையில் புஷ்பா -2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் -2 படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது சுகுமாரும் புஷ்பா- 2 படத்தை அந்த படத்துக்கு இணையாக பிரமாண்டமான காட்சிகளை கொண்டு உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.