போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்த சூர்யா, தற்போது தனது 41வது படத்திலும் அவர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சூர்யா மீனவராக நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக கோவாவில் நடைபெற உள்ளது.
இப்படத்தில் மீனவராக நடிக்கும் சூர்யா, அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதில் இளமையாக நடிக்கும் சூர்யா, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல்கட்ட படப்பிடிப்பில் இளைஞராக நடித்து வந்த சூர்யா அடுத்தபடியாக வயதான அப்பா வேடத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.