திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இதில் இவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி, பாடியுள்ள ‛பத்தல பத்தல' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். தர லோக்கலாக இந்த பாடலை எழுதி, பாடி உள்ளார் கமல். குறிப்பாக மத்திய அரசை விமர்சிக்கும் விதமான வரிகள் இடம் பெற்றுள்ளன.
‛‛கஜானாலே காசில்லே, கல்லாலையும் காசில்லே, காய்ச்சல் ஜுரம் நிறைய வருது. தில்லாலங்கடி தில்லாலே, ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே. சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டுள்ள கமலஹாசன், தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. சாவி இப்போது திருடன் கையில் என்று மத்திய அரசை மறைமுகமாக தாக்கி இருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது.
![]() |