இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் அதேசமயம் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகராகவும் ஒரே சமயத்தில் அறிமுகமானவர் சசிகுமார். அடுத்ததாக ஈசன் என்கிற படத்தை இயக்கினார். முதல் பட அளவிற்கு அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேசமயம் ஒரு நடிகராக அவருக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கவே நடிப்பு பக்கம் தனது கவனத்தைத் திருப்பி கடந்த பத்து வருடங்களில் பல படங்களில் நடித்துவிட்டார் சசிகுமார்.
ஆனால் சுந்தரபாண்டியன், நாடோடிகள் என மிகச் சில படங்களே அவருக்கு வெற்றி பட வரிசையில் அமைந்தன. கடந்த வருடத்தில் கூட அவர் நடித்த படங்கள்தான் அதிகம் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்ப உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் அவர் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக வெப்சீரிஸ் தான் இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகனாக விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனை நடிக்க வைக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.