சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

'ஆர்ஆர்ஆர்' என்ற ஆயிரம் கோடி படத்தில் நடித்து விட்டு அடுத்த சில வாரங்களிலேயே 'ஆச்சார்யா' என்ற படுதோல்விப் படத்தில் நடிப்போம் என ராம்சரண் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அப்பாவுடனும் சேர்ந்து நடித்திருந்தார். இதனால், இப்படம் பெரிய அளவில் ஓடும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தைப் பார்க்க யாருமே ஆர்வம் காட்டாமல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தார்கள். வெளிவந்த அனைத்து விமர்சனங்களுமே மிகவும் நெகட்டிவ்வாகத்தான் வந்தன. இந்நிலையில் ஒரு வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு கடிதம் எழுதினார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தின் தயாரிப்பாளராக ராம்சரண் நஷ்டஈட்டைத் தரத் தயாராகி வருகிறாராம். 'ஆச்சார்யா' தோல்வியடைந்தாலும் சிரஞ்சீவி நடித்து அடுத்து 'காட்பாதர், போலா சங்கர்' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.