சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் |
'ஆர்ஆர்ஆர்' என்ற ஆயிரம் கோடி படத்தில் நடித்து விட்டு அடுத்த சில வாரங்களிலேயே 'ஆச்சார்யா' என்ற படுதோல்விப் படத்தில் நடிப்போம் என ராம்சரண் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார். படத்தின் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் அப்பாவுடனும் சேர்ந்து நடித்திருந்தார். இதனால், இப்படம் பெரிய அளவில் ஓடும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால் படத்தைப் பார்க்க யாருமே ஆர்வம் காட்டாமல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தார்கள். வெளிவந்த அனைத்து விமர்சனங்களுமே மிகவும் நெகட்டிவ்வாகத்தான் வந்தன. இந்நிலையில் ஒரு வினியோகஸ்தர் சிரஞ்சீவிக்கு நஷ்டஈடு தர வேண்டும் என்று வெளிப்படையாகவே ஒரு கடிதம் எழுதினார்.
படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் அனைவருக்குமே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தின் தயாரிப்பாளராக ராம்சரண் நஷ்டஈட்டைத் தரத் தயாராகி வருகிறாராம். 'ஆச்சார்யா' தோல்வியடைந்தாலும் சிரஞ்சீவி நடித்து அடுத்து 'காட்பாதர், போலா சங்கர்' உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.