ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கர்நாடகத்தை சேர்ந்தவரான மோகன் கன்னட படங்களில் நடித்து வந்தார். அவரை மூடுபனி படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் பாலுமகேந்திரா. மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே அவரை பெரிய நட்சத்திரமாக்கியது. கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, அந்த சில நாட்கள், இளமைகாலங்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, உதயகீதம் என மோகன் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழ் ரசிகர்கள் அவரை வெள்ளிவிழா நாயகன் என்ற புகழவும் செய்தார்கள். மைக் மோகன் என்று கிண்டலும் செய்தார்கள்.
பெரும்பாலும் மோகன் காதல் மற்றும் குடும்ப படங்களில்தான் நடித்திருக்கிறார். பக்கா ஆக்ஷன் ஹீரோவாக நடித்தில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். அதுதான் அவர் கடைசியாக நடித்தது. இப்போது தனது அடுத்த ரவுண்டை ஹரா என்ற படத்தின் மூலம் தொடங்கி இருக்கிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக.
கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், விஜய் ஸ்ரீ இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது. இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. படத்தை தீபாவளிக்கு வெளிக்கொண்டு வர திட்டமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.