ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஈஸ்வரன் படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீநிதி விஜய் என்ற நடிகை சில மாதங்கள் முன்பு சோசியல் மீடியாவில், எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் சிங்கிள் ஆகவே இருப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பல கமெண்டுகளை கொடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் சிம்புவின் வீட்டின் முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்ரீநிதி விஜய் தர்ணா செய்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ள ஸ்ரீ நிதி விஜய், இத்தனை ஆண்டுகள் எனக்காக தான் நீங்கள் சிங்கிளாக இருந்தீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இன்னைக்கு தான் எனக்கு புரிந்தது. எல்லோரும் சிம்புவையும் என்னையும் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் என்று ஸ்ரீநிதி விஜய் பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே சிம்புவை இவர் காதலிக்கிறாரா? இல்லை ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.