இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சாய்பல்லவி அறிமுகமான பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அல்போன்ஸ் புத்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து அவர் பகத்பாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு என்ற படத்தை இயக்க உள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்று கூறிவந்த அல்போன்ஸ் புத்திரன் தற்போது ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் வகையிலான கதை ஒன்று தன்னிடத்தில் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமான ஒரு கதையை வைத்து உள்ளேன். இருவரையும் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்காக நான் உருவாக்கி வைத்திருக்கும் கதையை கூறுவேன். அந்த கதை நிச்சயம் இருவருக்கும் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இல்லாததால் இன்னும் என் வாழ்நாளில் இருவரையுமே ஒரு முறை கூட சந்திக்கவில்லை.
அதே நேரத்தில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்து, எதிர்காலத்தில் கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை சந்திக்க நேரிட்டால் அவர்களிடம் அந்த கதையை கூறுவேன். அந்த கதை அவர்களுக்கு பிடித்துவிட்டால் என்னுடைய முழு திறமையையும் அந்த படத்தில் பயன்படுத்தி, நல்லதொரு பொழுதுபோக்கு படமாக எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.