அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றியவர் அண்ணாமலை. இவர் கரூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டியில் பிறந்தவர். அரசியல் ஆர்வம் காரணமாக தனது ஐபிஎஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தமிழக பாஜகவில் இணைந்து மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் உருவாகியுள்ள அரபி என்ற படத்தில் அண்ணாமலை ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு கைகளும் இல்லாமல் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை செய்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. இதில் விஸ்வாசின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். முதலில் சினிமாவில் நடிப்பதற்கு தயங்கிய அண்ணாமலை இயக்குனர் சொன்ன கதை பிடித்து போனதால் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் மாலை வெளியாகிறது. இந்த படத்தில் நடித்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி நடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.