திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
சென்னை : தமிழ் சினிமாவில் பன்முக படைப்பாளி டி.ஆர். எனும் டி.ராஜேந்தர். நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அரசியலிலும் தனது திறமையை நிரூபித்தவர். கடந்தவாரம் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை வெளிநாடு கூட்டிச் சென்று சிகிச்சை செய்யும் எண்ணத்திலும் உள்ளார் அவரது மகனும், நடிகருமான சிம்பு.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சையையும் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.