வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சென்னை : தமிழ் சினிமாவில் பன்முக படைப்பாளி டி.ஆர். எனும் டி.ராஜேந்தர். நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். அரசியலிலும் தனது திறமையை நிரூபித்தவர். கடந்தவாரம் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது வயிற்றில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அவரை வெளிநாடு கூட்டிச் சென்று சிகிச்சை செய்யும் எண்ணத்திலும் உள்ளார் அவரது மகனும், நடிகருமான சிம்பு.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள டி.ராஜேந்தரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளார். தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சையையும் அளிக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.