ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை இயக்குநர் திருமுருகனை கோபி என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு கோபி என்ற பெயருடன் சீரியல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 1998 முதலே பயணிக்க ஆரம்பித்த திருமுருகன் இதுவரை 14 சீரியல்களை இயக்கியுள்ளார். இதில் 'மெட்டில் ஒலி', 'நாதஸ்வரம்', 'குல தெய்வம்', 'கல்யாண வீடு' ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டானது. கடைசியாக கொரோனா சமயத்தில் உடல்நலக்குறைவால் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அவர், எப்போது கம்பேக் கொடுப்பார் என அனைவருமே எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், 'கோபி ரிட்டர்ன்ஸ்' என சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம் திருமுருகன் தனது அடுத்த சீரியலுக்கான முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார். இதற்கான ஆடிஷனும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியலையும் திருமுருகன் தனது ஆஸ்தான டிவிக்கு தான் இயக்குகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விரைவில் திருமுருகனின் புதிய சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.