போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து வரிசையாக படங்கள் கையில் இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம், விக்ரம் நடிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து படம் இயக்குகிறார். தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை முடித்திருக்கிறார். இதில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு அடுத்து அவர் இயக்கும் கமலின் படம் மதுரையை கதை களமாக கொண்டது. விக்ரமை வைத்து இயக்கும் படம் கோலார் தங்கசுரங்கத்தை மையமாக கொண்டது. இதனை பா.ரஞ்சித் கேன்ஸ் பட விழாவில் தெரிவித்தார்.
19ம் நூற்றாண்டில் முதல்முறையாக கோலாரில் தங்கத்தை தோண்டி எடுத்த தமிழக சுரங்கத் தொழிலாளர்களைப் பற்றிய கதையாக உருவாகிறது. இந்தப் படம், பிரசாந்த் நீலின் கேஜிஎப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
தற்போது இயக்கி வரும் வேட்டுவம் படத்திற்கு பிறகு இதனை இயக்குகிறார். கேஜிஎப் படம் தங்க சுரங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய தாதாக்களின் கதையை கற்பனை கலந்து சொன்னார்கள். இந்த படத்தில் தங்க சுரங்கத்திற்கான உயிரையும், உழைப்பையும் கொடுத்த தமிழக தொழிலாளர்களை பற்றியது என்கிறார்கள்.