திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதேப்போல் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று அஜித் குமார் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் ரஜினியும் அஜித்தும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமாக தெரியவில்லை. தனித்தனியே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் முறையில் இணைத்து வெளியிட்டது போல் தெரிகிறது. இதனால் நெட்டிசன்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.