ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பின்னணி பாடகர் கேகே என்று அழைக்கப்படுகிற கிருஷ்ணகுமார் கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. தற்போது அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே இதயத்திற்கு செல்லும் பிரதான கரோனரி தமனியில் 80 சதவிகித அடைப்பு இருந்திருக்கிறது. இதுவல்லாமல் சிறிய மற்றும் துணை தமணிகளிலும் அடைப்பு இருந்திருக்கிறது. ஆனால் எங்கும் 100 சதவிகித அடைப்பு காணப்படவில்லை. நிகழ்ச்சியில் அவர் அதிக உற்சாகம் அடைந்திருக்கிறார். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். உடனடியாக அவருக்கு சிபிஆர் கொடுத்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.