தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்தில் அனிருத் இசையில் அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைக் காட்டிலும் அப்படத்தில் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்கள் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டன.
படத்தின் முதல் அறிவிப்பு வீடியோவின் போதே 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'விக்ரம்' படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற 'விக்ரம்….விக்ரம்…' பாடலைப் பயன்படுத்தினார்கள். கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் இடைவேளையின் போதும் அப்பாடல்தான் பின்னணியில் ஒலித்தது.
அது மட்டுமல்லாமல் படத்தின் ஆரம்பக் காட்சியில் குடித்துவிட்டு காரில் கமல்ஹாசன் சென்று கொண்டிருக்கும் போது அவரது காலில், 'சக்கு…சக்கு…வத்திக்குச்சி…' என்ற பாடல் ஒலிக்கும். அது எந்த படத்தின் பாடல் என ரசிகர்கள் தேடிப் பிடித்து டிரென்ட் ஆக்கி வருகிறார்கள்.

அப்பாடல் 1995ம் ஆண்டு வேலு பிரபாகரன் இயக்கத்தில், ஆதித்யன் இசையமைப்பில், அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'அசுரன்' படத்தில் இடம் பெற்ற பாடல். அப்பாடலை பிறைசூடன் எழுத ஆதித்யன், சுஜாதா பாடியிருந்தனர். அப்பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண், மன்சூரலிகான், ரோஜா ஆகியோர் நடனமாடியிருப்பார்கள். அன்றைய கால கட்டத்திலேயே மிகவும் ஹிட்டான பாடல் அது.
'விக்ரம்' படம் மூலம் மீண்டும் பேசப்படும் அப்பாடலை மேலும் பேச வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அது குறித்து அவர் கூறுகையில், “ஆதித்யன் இசையமைப்பில் என்னால் புரோக்ராம் செய்யப்பட்ட பெப்பியான வின்டேஜ் பாடல் இப்போது வைரலாகி வருவது மகிழ்ச்சி. அப்பாடல் 1995ம் ஆண்டு விஜிபி ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்ட பாடல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
காலம் கடந்தும் இப்படி சில பாடல்கள் பேசப்படுவது அந்தப் பாடலை உருவாக்கியவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.