ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்பொழுதும் ஜாலியாக சுற்றுலா கிளம்பிவிடும் நடிகைகள் பட்டியலில் மாளவிகா மோகனன் முதல் ஆளாக இருக்கிறார். மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த மாளவிகா, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்து சில நாட்களாக காட்டிற்குள் வனவிலங்குகளை நேரில் பார்ப்பதற்காக தினசரி சபாரி மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பயணத்தின் கடைசி நாளாக இவர்கள் காட்டில் பயணம் மேற்கொண்டபோது நீண்ட நேரமாக எந்த ஒரு மிருகமும் தட்டுப்படவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆன மாளவிகாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக அவர்கள் சென்ற பாதையில் சிறுத்தை ஒன்று இவர்கள் வரவுக்கு காத்திருந்தது போலவே அமர்ந்திருந்ததாம். உடனே தனது கேமராவை எடுத்து சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் மாளவிகா.
அந்த சிறுத்தை இவர்களை நோக்கி வந்ததும் மாளவிகாவுக்கு சில நொடிகள் மூச்சே ஸ்தம்பித்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். கிட்டத்த இப்படியே பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு சிறுத்தை இவர்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் வந்த பாதை வழியே திரும்பி சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனராம் மாளவிகாவும் அவரது தோழிகளும்.