ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தெலுங்கு இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் படம் மதராஸி கேங். இதில் அத்யாயன் சுமன் கேங்ஸ்டராக நடிக்கிறார். அனன்யா ராஜ் ஹீரோயின். அஷ்மித் படேல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் நடிப்பது குறித்து அனன்யா ராஜ் கூறியதாவது: மும்பை நகரில் உள்ள மூன்று கும்பல்களைப் பற்றிய கதை. குறிப்பாக தாதர் மற்றும் சிவாஜி பூங்கா இடையேயான பகுதிகளை மையமாகக் கொண்டது. நிறைய சேரிகள் உள்ளன, இங்குதான் இந்த கும்பல்கள் உள்ளன. அப்பகுதியில் வலுவான கேங்காக உருவெடுத்த மதராஸி கேங்கின் கதை இது.
என்னுடைய கேரக்டரின் பெயர் சரிதா, சேரிகளில் வளர்ந்தவள். மகாராஷ்டிரா கேங்கை சேர்ந்தவள். கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் காதலியாக நடித்திருக்கிறேன். உண்மையில் மூன்று மொழிகளில் படமாகி உள்ளது. தமிழில் பேசுவது கடினமாக இருந்தது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. விரைவில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் அனன்யா.