தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சூர்யா மற்றும் பாலா இருவரும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட்டணி சேர்ந்து சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படம் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் டிராப் ஆகி விட்டது என்று கூட சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் சூர்யா அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சூர்யா தற்போது பாலா படத்தின் ஷூட்டிங்கை மேலும் தள்ளிப்போட்டிருக்கிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்ல இருக்கிறார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு தான் பாலா பட ஷூட்டிங்கில் அவர் பங்கேற்பாராம். கோவாவில் அடுத்தகட்ட ஷூட்டிங் ஒரு மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.