இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கிய பிறகு சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார் சிவா. அந்த நேரம் பார்த்து ரஜினி அழைப்பு விடுத்ததால் அவரை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கத் தொடங்கினார். இதன் காரணமாக சூர்யா - சிறுத்தை சிவா இணைய இருந்த படம் தள்ளிப்போனது. இந்த நிலையில் அண்ணாத்தக்கு பிறகு மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை சிவா இயக்க போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அதன் பிறகு வெற்றிமாறன், ஞானவேல் இயக்கும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருப்பதால் சிவா படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக வேறு நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க சிவா கால்சீட் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை சிவா வட்டாரம் மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா, வெற்றி மாறன் படத்தை முடித்ததும், சிவா இயக்கத்தில் நடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அந்த படம் ஒரு பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறது என்கிறார்கள். அதனால் வெற்றிமாறனின் வாடிவாசலை முடித்ததும் சிவா, ஞானவேல் ஆகியோர் இயக்கும் படங்களில் சூர்யா நடிப்பார் என்று தெரியவந்துள்ளது.