வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை தி.நகரில் உள்ள ஒரு நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து வந்தார்.
அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலை மலேசியாவில் உள்ள இப்ராஹிம் என்ற தொழில் அதிபரை ஒரு இரவு சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறி அதற்காக பணபேரமும் நடத்தினார். இதுகுறித்து அமலாபால் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடன பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஸ்ரீதர், அழகேசன், தொழில் அதிபர்கள் பாஸ்கரன், இப்ராஹிம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி தொழிலதிபர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.