'முத்த மழை' வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை | நானியின் ‛தி பாரடைஸ்' படப்பிடிப்பு தாமதமாவது ஏன்? | நான் வாழ்ந்து வளர்ந்த இடத்தில் விமான விபத்து நடந்தது வேதனை அளிக்கிறது : உன்னி முகுந்தன் | தமிழுக்கு வரும் நரிவேட்ட ஹீரோயின் | கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் |
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வாத்தி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் இசையில் தனுஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் சமூக வலைதளத்தில் தனுசுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு கூறியுள்ளார். இந்த போட்டு தற்போது வைரலாகி வருகிறது.
வாத்தி படத்திற்கு பிறகு தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அருண்மதேஸ்வரன் இயக்குகிறார்.நானே வருவேன், திருச்சிற்றம்பலம், தி க்ரே மேன் உள்ளிட்ட படங்கள் தனுஷின் அடுத்தடுத்த வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.