புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா | தர்ஷனுக்கு வழங்கிய ஜாமின் ரத்து : சுப்ரீம் கோர்ட் உத்தரவு | அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி சமந்தா, நாக சைதன்யா ஜோடி.
நாக சைதன்யா தற்போது ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை சமந்தாவின் பிஆர் டீம் பரப்பி வருவதாக நாக சைதன்யா ரசிகர்கள் குற்றம் சாட்டுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது பற்றிய செய்தி ஒன்றைப் பகிர்ந்து சமந்தா காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள், நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், போங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மேஜர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.