விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடியாக இருந்து கல்யாணம் செய்து கொண்டு சீக்கிரத்திலேயே பிரிந்த ஜோடி சமந்தா, நாக சைதன்யா ஜோடி.
நாக சைதன்யா தற்போது ஷோபிதா துலிபலா என்ற நடிகையைக் காதலித்து வருவதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகளை சமந்தாவின் பிஆர் டீம் பரப்பி வருவதாக நாக சைதன்யா ரசிகர்கள் குற்றம் சாட்டுவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது பற்றிய செய்தி ஒன்றைப் பகிர்ந்து சமந்தா காட்டமான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். “பெண் பற்றிய வதந்திகள் உண்மையாக இருக்க வேண்டும். ஆண் பற்றிய வதந்தி பெண்களால் விதைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வளருங்கள்…சம்பந்தப்பட்டவர்கள் நகர்ந்து விட்டார்கள், நீங்களும் நகருங்கள். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், உங்கள் குடும்பத்தை கவனியுங்கள், போங்கள்,” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
ஷோபிதா துலிபலா சமீபத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'மேஜர்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சில ஹிந்தி, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.