இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபாஸ் ஜோடியாக தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரத்திங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் கூடிய சீக்கிரமே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் திருமணம் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அந்த கேள்விக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் சுமுகமான உறவு இருந்து கொண்டிருப்பதாகவும் எங்கள் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.