ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக தற்போது பிரபாஸ் நடித்து வரும் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்த பின்னர், அவர் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோருடன் ஜோடியாக நடித்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வெற்றியும் பெற்று விட்டன. இந்த நிலையில் தற்போது தான் சலார் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, “இந்தப் படத்தில் ஆத்யா கதாபாத்திரமாக என்னை உருவாக்கியதற்கு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி . அதேபோல அற்புதமான மனிதரான டார்லிங் பிரபாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் புவன் ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு சிறப்பான படத்தில் கிடைத்த பாசிட்டிவான எண்ணங்கள், பணியாற்றிய அனுபவம் எல்லாமே ஒரு குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வை கொடுத்தது” என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் ஒளிப்பதிவாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.