இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'விராட பருவம்' படத்தின் பிரமோஷன் பேட்டி ஒன்றை அளிக்கும் போது அவர் சொன்ன சில விஷயங்கள் சர்ச்சை ஆனது.
'காஷ்மீர் பைல்ஸ்' படம் பற்றியும், மாட்டுக்கறியை எடுத்துச்சென்ற இஸ்லாமியரைத் தாக்கிய நிகழ்வுக்கு என்ன வித்தியாசம் என்று சொல்லியிருந்தார். சர்ச்சை எழுந்த பின் அது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதற்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி சாய் பல்லவின் மனுவை ரத்து செய்துள்ளார்.