ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
ஆடுகளம் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் கிஷோர். தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வரும் கிஷோர், வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனாக நடித்தார். இதை தொடர்ந்து ஹரிதாஸ், கடிகார மனிதர்கள் உள்ளிட்ட சில படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‛மஞ்ச குருவி'.
வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி இயக்குகிறார். வேல் ஒளிப்பதிவு செய்கிறார், சவுந்தர்யன் இசை அமைக்கிறார். புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி, குங்பூ பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி கூறியதாவது: இன்றைய சமூக சூழலில் மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.